Press enter to see results or esc to cancel.

சரண் படத்தில் வினய்க்கு இரட்டை வேடம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண் இயக்கும் புதிய படம் ‘ஆயிரத்தில் இருவர்’. இப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் மூன்று புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர்.



இவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்த நடிகை மானு இந்த படத்தின் மூன்று புதுமுக நாயகிகளான சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா, கேஷா ஆகிய மூன்று பேரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மும்பையைச் சேர்ந்தவரான சாமுத்திரிகா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுதான். அதேபால், கேரளாவில் பிறந்து கன்னடத்தில் வளர்ந்தவரான ஸ்வஸ்திகாவும், மும்பையிலிருந்து தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமான கேஷா கம்பட்டியும் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

தன்னுடைய படத்திற்காக சரண் மும்பையில் தேடுதல் வேட்டை நடத்தி, இந்த மூன்று நாயகிகளையும் கண்டுபிடித்து நடிக்க வைத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கான பெயர்களையும் இவரே சூட்டியிருக்கிறார்.

இவர்களுடன் பிரதீப் ராவத், இளவரசு, ஞான சம்பந்தம், காஜல், ஜனா, ரித்திகா, ஸ்ரீரஞ்சனி, தாஸ், ராம்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க திருநெல்வெலி மாவட்டத்தில் நடக்கும் கதை. ஐதராபாத்தில் 48 டிகிரி கடும் வெயிலிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

இதில் வினய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திரைக்கு கொண்டுவர உள்ளனர். படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். கிருஷ்ணா ரமணன் ஒளிப்பதிவு செய்கிறார்.