Press enter to see results or esc to cancel.

தனிஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் இல்லை

‘தளபதி’ படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னத்தினால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அரவிந்தசாமி. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், திடீரென சினிமாவில் இருந்து ஒதுங்கி, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அரவிந்த்சாமிக்கு, படவாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை.

இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவியது. ஆனால், இதை அரவிந்த் சாமி மறுத்தார். அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதையும் உறுதி செய்தார்.

இதையடுத்து, ஜெயம் ரவி நடிக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி நடிப்பதாக செய்தி வெளிவந்தது. இதை அவரும் உறுதிப்படுத்தினார். ஆனால், இப்படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை ‘தனி ஒருவன்’ படக்குழு மறுத்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்தான் வருகிறாராம். வில்லனாக, ‘தடையற தாக்க’, ‘இவன் வேற மாதிரி’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடித்த வம்சி கிருஷ்ணாதான் நடிக்கிறாராம். இதுவரையிலான படங்களைவிட இப்படத்தில் வம்சி கிருஷ்ணாவின் கதாபாத்திரம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.