Press enter to see results or esc to cancel.

ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி வாங்கியதாக வதந்தி –தமன்னா ஆவேசம்

‘சிறுத்தை’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– முன்னணி கதாநாயகியாக இருக்கும் நீங்கள் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறீர்களே?

பதில்:– அந்த படத்தை எடுப்பவர்கள் ஆரம்பத்தில் எனது வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்கள். எனவேதான் ஆட சம்மதித்தேன். சுருதிஹாசன் இந்தியில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். முன்னணி நடிகைகள் குத்தாட்டம் ஆடுவது தவறல்ல.

கே:– ஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி வாங்கினீர்களாமே?

ப:– எனக்கு எதிராக ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று புரியவில்லை. நட்புக்காக தான் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்தேன். எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது படம் எடுப்பவர்களுக்கு தெரியும். வீணாக இதுபோல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

கே:– இந்தியில் நடித்த இரு படங்களும் தோற்று விட்டதே?

ப:– படங்கள் தோல்வி அடைவதும் வெற்றி பெறுவதும் என் கையில் இல்லை. தெலுங்கில் முதலில் நடித்த படம் தோற்றது. தொடர்ந்து வந்த மேலும் இரு படங்களும் தோல்வியை தழுவின. ‘ஹேப்பி டேஸ்’ படம் வெற்றிக்கு பிறகுதான் நான் காலூன்ற முடிந்தது. அதுபோல் இந்தியில் 2 படங்கள் தோற்றாலும்கூட 3–வது படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விதான் வெற்றிக்கு முதல் படி.

கே:– தமிழ், தெலுங்கு படங்களை ஒதுக்கிறீர்களா?

ப:– தமிழில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். தெலுங்கில் பாகுபலி, ஆகடு படங்களில் நடிக்கிறேன்.

கே:– திருமணம் எப்போது?

ப:– திருமணம் பற்றி இன்னும் திட்டமிடவில்லை. திருமணத்தை பற்றி சிந்திக்கவோ அல்லது காதலிக்கவோ எனக்கு நேரம் இல்லை. பிசியாக நடிக்கிறேன். தினமும் மூன்று மணி நேரம்தான் தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறது.

இவ்வாறு தமன்னா கூறினார்.