Press enter to see results or esc to cancel.

அனுஷ்காவுடன் மோதலா?: ஆர்யா விளக்கம்

ஆர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கமாக பழகினார்கள். இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் உறவில் விரிசல் எற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.



ஆர்யா தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கும் அமரகாவியம் படத்தின் பாடல்
வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இவ்விழாவுக்கு நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா மூவரையும் ஆர்யா அழைத்து இருந்தார். ஆனால் அனுஷ்கா மட்டும் வராமல் புறக்கணித்து விட்டார். இது அவர்கள் மோதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றனர். இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

அமரகாவியம் பட விழாவுக்கு அனுஷ்கா, டாப்சியை அழைத்து இருந்தேன். அவர்கள் வரவில்லை. அனுஷ்கா பாகுபலி படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். டாப்சி இந்தி படப்பிடிப்பில் இருந்தார். எனவேதான் அவர்களால் வர முடியவில்லை. அனுஷ்காவுக்கும் எனக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. இருவருக்கும் இடையே சுமூகமான நட்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.