Press enter to see results or esc to cancel.

ஸ்ரேயாவை பார்த்து பயந்து நடுங்கிய சித்தார்த்

கதாநாயகியாக ஸ்ரேயா நடிப்பதை அறிந்து பயந்தேன் என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.

பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி, ஆய்த எழுத்து உட்பட பல படங்களில் நடித்தவர் சித்தார்த்.

இந்தியில் ரங் தே பசந்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தீபா மேத்தா இயக்கும் மிட் நைட் சில்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்தது குறித்து சித்தார்த் கூறுகையில், ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் சிறிது பயம் ஏற்பட்டது. ஏனென்றால் அவரது கதாபாத்திரம் வலுவானது.

அதற்கு சமமாக கடினமான உழைப்பின் மூலம் அந்த பயத்தை கடந்து வந்தேன். அதே போன்று எனது கதாபாத்திரமும் நன்றாக வந்திருக்கிறது.

இதுவரை நடித்ததில் இது மாறுபட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.