Press enter to see results or esc to cancel.

சந்தானத்தின் மீது பாக்யராஜ் பரபரப்பு புகார்

எனது சொந்த கதையை திருடி திரைப்படமாக எடுத்துள்ளார்கள் என சந்தானத்தின் மீது பாக்யராஜ் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று போய் நாளை வா படம் 1981 ஆம் ஆண்டு எனது திரைக்கதை, மற்றும் இயக்கத்தில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இக்கதைக்கான உரிமையை நான் சட்டப்படி வைத்துள்ளேன். இந்நிலையில் நடிகர் சந்தானம் தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் என் அனுமதியின்றி எனது கதையை திருடி திரைப்படமாக்கியுள்ளார், இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர்களான சந்தானம், இராமநாராயணன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

நீதிமன்றத்தின் மூலம் வழக்கும் தொடர்ந்துள்ளேன், நான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை.

நான் தொடுத்துள்ள வழக்கின்படி, நீதிபதியின் உத்தரவின் பேரில் தலைப்பில் என் பெயர் சேர்த்துள்ளனர். படத்தின் வசூல் நிலவரமும் அவர்களிடம் கேட்டுள்ளேன்.

நீதிமன்றத்தில் இக்கதைக்கு உரிமையாளர் நான் தான் என்பதை நிரூபித்து அவர்களிடம் நஷ்டஈடு கேட்பேன்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை அவர்கள் தரப்பில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை, நான் அவர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.