மீண்டும் முந்தானை முடிச்சு
நடிகர் பாக்யராஜ்- ஊர்வசி ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த ஜீவா, இந்த படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார்.
இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள்.
பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன், இந்த படத்தை இயக்க, ரமேஷ் தயாரிக்கிறார்.
சி.ஆர்.மாறவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அபிஷேக் இசையமைக்கிறார்.
பாடல்களை கவிஞர் வாலி, நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். மாப்பிள்ளை வினாயகர் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...