கௌதம் மேனனுடன் இணையும் அஜித்
கொலிவுட்டில் 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்தையடுத்து கௌதம் மேனன் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
அஜித்தும், கௌதம் மேனனும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைகிறார்கள்.
பலமுறை இருவரும் இணைந்து படம் பண்ணப் போகிறார்கள் என்ற செய்தி தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அஜித் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர்.
இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு 2014ம் ஆண்டு கௌதம் மேனனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் விஜய்யை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வந்தன.
ஆனால், அப்படத்தை தற்போது கைவிட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...