Press enter to see results or esc to cancel.

என் ரத்தத்தோடு கலந்தது நடிப்பு: துளசி

மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கவுதமை மேடைக்கு அழைத்து வந்து கார்த்திக் அறிமுகப்படுத்தினார். துளசியை மணிரத்னம் அறிமுகம் செய்தார்.

மணிரத்னம் பேசுகையில், கவுதமை நாயகனாக தெரிவு செய்த பின்பு நாயகி தேடல் நடந்தது.

நிறைய பேரை பார்த்தும் திருப்தி இல்லை. கார்த்திக், ராதாவை “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா.

எனவே ராதா மகளை நடிக்க வைக்கலாம் என்று துளசியை தெரிவு செய்தேன் என்றார்.

பின்னர் துளசியிடம் கமெரா முன்னால் பயமின்றி எப்படி உங்களால் நடிக்க முடிந்தது என்று மணிரத்னம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த துளசி, என் தாய் ராதா, சகோதரி கார்த்திகா சினிமாவில் உள்ளனர்.

எனவே நடிப்பு என் ரத்தத்தோடு கலந்தது என்றும் அதனால் கமெராவுக்கு பயப்படவில்லை எனவும் கூறினார்.