Press enter to see results or esc to cancel.

தனிமையை விரும்பும் நயன்தாரா

என்னை தனியாக விட்டு விடுங்கள், தொந்தரவு செய்யாதீர்கள் என கோபமாக கூறியுள்ளாராம் நயன்தாரா.

பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் நயன்தாரா.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு ஜனவரி 1ஆம் திகதி முதல் மும்பையில் நடந்து வருகிறது.

சுமார் 10 நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நயன்தாரா, அட்டிலி இயக்கும் ராஜா ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முன்பெல்லாம் படப்பிடிப்பில் இருக்கும்போது சக நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பாராம் நயன்தாரா.

ஆனால் தற்போது அவருடைய போக்கு மாறிவிட்டதாம், யாரிடமும் பேசாமல் தனிமையில் அமர்ந்துள்ளாராம்.

இவரிடம் பத்திரிக்கையாளர்கள் யாராவது பேச முயன்றால், நீங்கள் எப்போதும் என்னை தனிமையில் விடுவதில்லை. என்னுடைய வாழ்வில் இப்போது அதிகப்படியாக எதுவும் நடக்கவில்லை.

வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறேன். என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை, என்னை தனிமையில் விடுங்கள் என்று கோபமாக கூறுகிறாராம்.