Press enter to see results or esc to cancel.

பெங்களூருக்கு பறந்தார் ப்ரியாமணி

பெங்களூரில் புதிதாக வீடொன்றை வாங்கி நிரந்தரமாக குடியேறியுள்ளார் ப்ரியாமணி.

சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார் ப்ரியாமணி.

இப்படத்திற்கு பிறகு அதிகளவில் வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இதன் பிறகும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உள்ள தனது அபிமானிகளை சந்தித்து சான்ஸ் கேட்டும் பலனளிக்காததால், கன்னட சினிமாவை தஞ்சமடைந்துள்ளார்.

அத்துடன் சென்னையில் இருந்த தனது வீட்டைகூட காலி பண்ணி விட்டு நிரந்தரமாக பெங்களூருக்கு குடிபெயர்ந்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள சில நடிகர்கள் தொடர்ந்து அவரை ஆதரிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம்.

இதன் காரணமாக, இனிமேற்கொண்டு அதிரடி கிளாமர் நடிகையாகவும் உருவெடுக்க முடிவு செய்துள்ள ப்ரியாமணி, வித்யாபாலன் பாணியில் அதிரடி கிளாமர் கதைகளை படமாக்கும் இயக்குனர்களுடன் ரகசிய மீட்டிங் போட்டு வருகிறாராம்.