எதிர்நீச்சல் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்?
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் ‘எதிர்நீச்சல்’. இந்த
படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். வெற்றிப்படமாக அமைந்த
இப்படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து
‘காக்கிச்சட்டை’ (டாணா) படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தற்போது
இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில காட்சிகளும், பாடல்கள் மட்டுமே
படமாக்கப்பட உள்ளன.
இப்படத்திற்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது இந்தியில் பிரபல இயக்குனர் பால்கி இயக்கும் படத்திலும், தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அநேகன்’ படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்தபின்னர் துரை செந்தில்குமார் இயக்கும் புதுப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
இப்படத்திற்கு பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது இந்தியில் பிரபல இயக்குனர் பால்கி இயக்கும் படத்திலும், தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அநேகன்’ படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்தபின்னர் துரை செந்தில்குமார் இயக்கும் புதுப்படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
Similar to this Post


APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...