Press enter to see results or esc to cancel.

மனம் இயக்குனருடன் இணையும் சூர்யா

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த மனம் படத்தை இயக்கிய விக்ரம் குமாருடன், சூர்யா தனது அடுத்த படத்தில் இணைய உள்ளார். இதனை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டைன்மென்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தமிழில் யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விக்ரமுடன் சூர்யா இணையும் இந்தப் புதுப் படத்தின் தயாரிப்புப் பணிகள் அடுத்த வருடம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் 2டி எண்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் தளத்தில் வெளிவந்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி சூர்யா நடித்துள்ள 'அஞ்சான்' திரைக்கு வருகின்றது. இது தவிர ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் வெங்கட்பிரபு இயக்கும் 'மாஸ்' திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஏமி ஜாக்சனுடன் அவர் இணைந்து நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவரது புதிய படம் தொடங்கும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.