Press enter to see results or esc to cancel.

சமருக்கு தொல்லை கொடுத்தாரா அலெக்ஸ் பாண்டியன்?

கொலிவுட்டில் 'சமர்' தயாராகி வெளியாவதற்குள் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்னைகள். படத்தின் வெளியீட்டு திகதியும் மாறிக் கொண்டே இருந்தது.

பொங்கல் நேரத்தில் பல படங்கள் ஒன்றாக வெளியானால், அதன் விளைவுகள் படத்துறையை பாதிக்கும்.

எனவே பெரிய படங்களை ஒரே சமயத்தில் வெளியாவதை தவிர்க்க வேண்டும் என்பது திரையுலகத்தில் பரவலாக இருக்கும் சிந்தனை.

போட்டி அதிகமானால், பட வசூல் குறைய வாய்ப்புள்ளது.

ஆனால், இந்த முறை பொங்கலுக்கு 'அலெக்ஸ் பாண்டியன்', 'சமர்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'புத்தகம்' என்று படங்கள் வெளியாகின.

இந்நிலையில் பொங்கலுக்கு ரிலீஸான 'சமர்' படத்தின் இயக்குனர் திரு தனது டுவிட்டர் இணையத்தில் " Dear Eco friendly studio... எங்கள் படத்தை நிறுத்த நீங்கள் முயற்சித்தது தெரியும்..

இருந்தாலும் உங்களால் அது முடியவில்லை.. better luck next time..

மற்றவர் படைப்புகளை கவனிப்பதை விட்டு உங்கள் படைப்புகளில் கவனம் செலுத்துங்கள்.. உங்கள் அடுத்த படத்துக்கு நல்வாழ்த்துகள்.. God Bless! " என்று தெரிவித்துள்ளார்.

இவர், அலெக்ஸ் பாண்டியன் படத்தை வெளியிட்ட ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தையே குறிப்பிட்டுள்ளார்.