பரதேசி படத்திற்குப் பிறகு இரும்பு குதிரை நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’.
இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில்
‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றிருக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. அதன்பிறகு படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் யுவராஜ் போஸ், அதர்வா, பிரியா ஆனந்த், ராய் லட்சுமி, பாடலாசிரியர் தாமரை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளேன். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியிருக்கிறேன். இப்படத்தில் பைக் ரேஸ் ஓட்டுபவராகவும் பைக் ஓட்டுவதற்காக பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிப்பவராகவும் அதர்வா நடித்திருக்கிறார். ஒரு பைக் ரேசர் உடல் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கேற்றார் போல் தன் உடல் அமைப்பை மாற்றிக் கொண்டார் அதர்வா.
இத்தாலியில் பைக்ரேஸ் நடப்பதுபோல் காட்சிகள் எடுத்தோம். அந்த காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. ஹாலிவுட் தரத்திற்கு ஏற்றார்போல் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. மேலும், பிரியா ஆனந்த், ராய் லட்சுமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் என்று கூறினார்.
அதர்வா பேசும் போது, பரதேசி படத்திற்குப் பிறகு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு ஏற்றார் போல் இப்படம் அமைந்தது. இயக்குனர் யுவராஜ் இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் அதிவேக பைக் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. 8 கியர் உள்ள பைக்கை ஓட்டினேன். ஆனால் என்னால் 6 கியருக்கு மேல் ஓட்ட முடியவில்லை. 180 கி.மீ வேகம் வரை பைக்கை மிகவும் மகிழ்ச்சியாக ஓட்டினேன். மேலும் படம் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் கூறினார்.
அதன்பின் பிரியா ஆனந்த், ராய் லட்சுமி பேசும்போது படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறினார்கள்.
இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றிருக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. அதன்பிறகு படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் யுவராஜ் போஸ், அதர்வா, பிரியா ஆனந்த், ராய் லட்சுமி, பாடலாசிரியர் தாமரை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளேன். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியிருக்கிறேன். இப்படத்தில் பைக் ரேஸ் ஓட்டுபவராகவும் பைக் ஓட்டுவதற்காக பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிப்பவராகவும் அதர்வா நடித்திருக்கிறார். ஒரு பைக் ரேசர் உடல் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கேற்றார் போல் தன் உடல் அமைப்பை மாற்றிக் கொண்டார் அதர்வா.
இத்தாலியில் பைக்ரேஸ் நடப்பதுபோல் காட்சிகள் எடுத்தோம். அந்த காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. ஹாலிவுட் தரத்திற்கு ஏற்றார்போல் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. மேலும், பிரியா ஆனந்த், ராய் லட்சுமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் என்று கூறினார்.
அதர்வா பேசும் போது, பரதேசி படத்திற்குப் பிறகு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு ஏற்றார் போல் இப்படம் அமைந்தது. இயக்குனர் யுவராஜ் இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் அதிவேக பைக் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. 8 கியர் உள்ள பைக்கை ஓட்டினேன். ஆனால் என்னால் 6 கியருக்கு மேல் ஓட்ட முடியவில்லை. 180 கி.மீ வேகம் வரை பைக்கை மிகவும் மகிழ்ச்சியாக ஓட்டினேன். மேலும் படம் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் கூறினார்.
அதன்பின் பிரியா ஆனந்த், ராய் லட்சுமி பேசும்போது படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறினார்கள்.
‘தளபதி’ படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னத்தினால் தமிழ் சினிமாவுக்கு
அறிமுகப்படுத்தப்பட்டவர் அரவிந்தசாமி. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர்,
திடீரென சினிமாவில் இருந்து ஒதுங்கி, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து
வந்தார்.
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அரவிந்த்சாமிக்கு, படவாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை.
இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவியது. ஆனால், இதை அரவிந்த் சாமி மறுத்தார். அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதையும் உறுதி செய்தார்.
இதையடுத்து, ஜெயம் ரவி நடிக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி நடிப்பதாக செய்தி வெளிவந்தது. இதை அவரும் உறுதிப்படுத்தினார். ஆனால், இப்படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை ‘தனி ஒருவன்’ படக்குழு மறுத்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்தான் வருகிறாராம். வில்லனாக, ‘தடையற தாக்க’, ‘இவன் வேற மாதிரி’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடித்த வம்சி கிருஷ்ணாதான் நடிக்கிறாராம். இதுவரையிலான படங்களைவிட இப்படத்தில் வம்சி கிருஷ்ணாவின் கதாபாத்திரம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அரவிந்த்சாமிக்கு, படவாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை.
இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவியது. ஆனால், இதை அரவிந்த் சாமி மறுத்தார். அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதையும் உறுதி செய்தார்.
இதையடுத்து, ஜெயம் ரவி நடிக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி நடிப்பதாக செய்தி வெளிவந்தது. இதை அவரும் உறுதிப்படுத்தினார். ஆனால், இப்படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை ‘தனி ஒருவன்’ படக்குழு மறுத்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்தான் வருகிறாராம். வில்லனாக, ‘தடையற தாக்க’, ‘இவன் வேற மாதிரி’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடித்த வம்சி கிருஷ்ணாதான் நடிக்கிறாராம். இதுவரையிலான படங்களைவிட இப்படத்தில் வம்சி கிருஷ்ணாவின் கதாபாத்திரம் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHmeNrgseU19e_MQE0E8kM86J7H5HEDxp-Q0K9zI7JnbN-smHPRkFc2ElYPNxrbj4qxYUE6WYxCaiwr4u7prD6RAktqBrFoRns287GDqkIoxpjW_mMpEVa3a9HE4DEV65aRJVqCocAgzIY/s1600/asin-1.jpg)
இன்னொரு புறம் சமூக சேவை பணியிலும் ஓசையில்லாமல் ஈடுபட்டு வருகிறார். ஏழை மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்குகிறாராம். சமீபத்தில் மும்பையில் ரத்ததான முகாம் நடந்தது. இதை துவக்கி வைக்க அசினை அழைத்து இருந்தனர்.
அங்கு சென்ற அசினும் ரத்த தானம் செய்தார். அத்துடன் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை அசினும் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:– என் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை இப்போது செய்துள்ளேன். தேவையானவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக உறுப்புகளை தானம் செய்துள்ளேன்.
எனது நடவடிக்கை மற்றவர்களையும் இதுபோல் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். எல்லோரும் என்னுடன் இணைந்து உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினியும், கவிஞர் வைரமுத்துவும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும்
தெரியும். ரஜினியின் பல படங்களுக்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு
திரும்பிய வைரமுத்துவை ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்து நலம்
விசாரித்தார்.
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கோவையில் பொதுக்கூட்டம், பேரணி என்று விழா நடத்திய வைரமுத்து, அதன்பின் சிலநாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஏற்கெனவே முதுகுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட காரணத்தினால் மேலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆகையால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பிய வைரமுத்துவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் பூரண குரணமடைய இறைவனை தான் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
ஏற்கெனவே, உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ரஜினியை வைரமுத்து நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கோவையில் பொதுக்கூட்டம், பேரணி என்று விழா நடத்திய வைரமுத்து, அதன்பின் சிலநாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஏற்கெனவே முதுகுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட காரணத்தினால் மேலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆகையால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பிய வைரமுத்துவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் பூரண குரணமடைய இறைவனை தான் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.
ஏற்கெனவே, உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ரஜினியை வைரமுத்து நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைத் தொடர்ந்து விஷால் நடித்து வரும் புதிய படம் ‘பூஜை’. இப்படத்தை ஏற்கெனவே விஷாலை வைத்து ‘தாமிரபரணி’ படத்தை எடுத்த இயக்குனர் ஹரி இயக்குகிறார். இதில், விஷாலுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், முகேஷ் திவாரி, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், சூரி, மனோபாலா, கௌசல்யா, சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யுவன் இசையமைக்கும் இப்படத்தை விஷால் தன்னுடைய சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் தியேட்டர் உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9f0CF1cWI3bLqbXXAluGjKxZI9iCRhUY0XuPmKx2rKVxQ0e-FG8D23B-ROQXM9ereGyjsGTyBF_MPRyx9C2TGWqW3GUQfK8Hk97miKuWxfxuYZ9Lcxyh3LQx4vdgknUxB-BypH7Yf-lqD/s1600/Poojai1.jpg)
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வரும் வேளையில், இப்படக்குழுவினர் தற்போது படப்பிடிப்புக்காக பீகார் மாநிலத்திற்கு செல்லவுள்ளனர். அங்கு கிளைமாக்ஸ் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் எடுக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் சிறப்பம்சமாக பீகார் மாநிலத்தின் உண்மையான அரசியல்வாதி ஒருவர் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. கிளைமாக்சைத் தொடர்ந்து 3 பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ள நிலையில், அவற்றை சென்னை, ஐதராபாத் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கவுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXjMB99KuC3brjt6JDFO2vqiFGq39nUcqXSnssv0D6Q_i6LVkbHYfVh6Bcyp0XXREwdeFd6M99ilpjn242VMnHT8ZUjMNPAwjBKLki1Zo1VjURJ5WFoc-Xhq1HA2GgdowwlPOHV8v4MSXb/s1600/suriya.jpg)
தமிழில் யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விக்ரமுடன் சூர்யா இணையும் இந்தப் புதுப் படத்தின் தயாரிப்புப் பணிகள் அடுத்த வருடம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் 2டி எண்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் தளத்தில் வெளிவந்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி சூர்யா நடித்துள்ள 'அஞ்சான்' திரைக்கு வருகின்றது. இது தவிர ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் வெங்கட்பிரபு இயக்கும் 'மாஸ்' திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஏமி ஜாக்சனுடன் அவர் இணைந்து நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவரது புதிய படம் தொடங்கும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioYvtzrzgblca0NNP9lU7HlMxrGCNQ5T4q6jW_QitQfhedq6HrHpwGfZ24ukrMrC8SvfiqFRyp7E3oKcROUrblNZ6hz8s4Rp1aBNa5XoxmGBNre6ZjFAdteUtQeB1UobqwmDYpljQ1Nc7K/s1600/YSR.jpg)
அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா- நயன்தாரா நடிக்கும் ‘மாஸ்’ படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைப் பற்றி யுவன் கூறும்போது, ‘மாஸ்’ படத்தில் 6, 7, 8 சிறப்பம்சம் உள்ளது என்று கூறினார்.
இதைப்பற்றி தெளிவாக ஆராய்ந்த போது, வெங்கட் பிரபு படத்தில் யுவன் இணைவது 6-வது படம் என்பது தெரியவந்தது. இதற்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை-28’, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார்.
அதேபோல் சூர்யா நடிப்பில் யுவன் இசையமைப்பது 7-வது முறையாகும். இதற்குமுன் பூவெல்லாம் கேட்டுப்பார், நந்தா, மௌனம் பேசியதே, பேரழகன், வேல், அஞ்சான் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார்.
அதேபோல் நயன்தாரா நடிப்பில் யுவன் இசையமைப்பது 8-வது முறையாகும். கள்வனின் காதலி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஆரம்பம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqD4PAsL6rS1wzb_DVK9bHqiQ-XQrAC7E2JHR0XmWEwl_QqQ7aB8GkguC7jhMGIyo5ckUUMz9mqworgEmn1D2XZVWUJnolmMD18C-tpBq8RbCNtlaSum_9-XkO1Y0L__5AiAnyiN_W7uVa/s1600/anjali-latest-news-1728x800_c.jpg)
கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடக்கிறது. இதில் ஷகிலா வேடத்தில் அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அஞ்சலி கவர்ச்சியாக தோன்றுவதால் ஷகிலா கேரக்டருக்கு அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஞ்சலி தான் அடுத்த சில்க்ஸ்மிதா என தெலுங்கு டைரக்டர் பரபரப்பாக பேசி உள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் அஞ்சலி கலந்து கொண்டார். அவ்விழாவில் பிரபல இயக்குனர் ஒருவர் பங்கேற்று பேசும்போது, ‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்–2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’’ என்றார்.
இதை கேட்டதும் கூட்டத்தினர் கைதட்டினர். ஆனால் அஞ்சலிக்கு அந்த பேச்சு பிடிக்கவில்லை. சில்க்ஸ்மிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கோபத்தோடு அவ்விழாவில் இருந்து வெளியேறி விட்டாராம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh00JWvMB7z1YDrfAAz_qqXI9AHwR1nXuPn7_C2EI3a3PqYcSPRGP0rZZjc6Kolc6HNic4b_MTqP7S3kzXFXsVzZ_eD9G5-nR3XAiSurAYyKle37nYKnouitOyUtQ8afUE6imNk9JfCTLdQ/s1600/linga-movie.jpg)
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை அங்கு படமாக்கப் போகிறார்களாம். ஆகஸ்ட் 18-ந் தேதி இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி ‘லிங்கா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது படக்குழு. இப்படத்தை ராக்லைன் வெங்கேடஷ் தயாரிக்கிறார்.
![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t31.0-8/p600x600/892627_290967237712749_355955832_o.jpg)
![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfa1/t31.0-8/p600x600/892627_290967237712749_355955832_o.jpg)
APA Times Your Times
இணைய தளங்களில் தளங்களுக்கான தொடர்புகள்...